Wednesday, March 18, 2015

சொர்கம்

உன்னை சீராட்டி,பாராட்டி,
பாலூட்டி, சோறூட்டி
வளர்த்தேன்.
நீ உறங்குகிறாயா என்று
ராவெல்லாம் கண்முழித்து
பார்த்தேன்.
உன் உடம்புக்கு ஒன்றென்றால்
உண்ணாமல் உருகினேன்.
இவை யாவும்
கடமை என்று
நினைக்கவில்லை
வரம் என்றே நினைத்திருந்தேன்.


இன்று என் கூடு
வெறும் கூடு
உனக்கென்று தனி கூடு
நான் உனக்கு
செய்ததை
நீ எனக்கு
செய் என்றால்
மாற்றாந்தாய் ஆகிவிடுவேன்.

நீ என் வீடு
வரும் நாளில்
என் அருகில்
அமர்ந்து
ஒரு ஐந்து நிமிடம்
என் ரத்தம் சுண்டிய
சுறுங்கிய கையை
உன் கைகளுக்குள்
இறுக வைத்து மூடிக்கொள்.
அம்மா என்று ஆசையாய்
ஒரு வார்த்தை.
என் கண்களுக்குள்
ஒளிந்திருக்கும்
உன்னை ஒரு நிமிடம்
உற்றுப்பார்
போதுமடா
வாழ்நாளில்
அந்த ஒரு நிமிடம்.
என் வீட்டுக்குள்
வந்திடுமே
சொர்கமுமே!!!