Monday, March 9, 2015

பெண் விதை

பெண் விதை


செடியாக , மரமாக
வளரத்தானே
விதைத்தீர்கள்
பின் ஏன்
முளைக்கும் முன்னரே
கிள்ளி எறிந்தீர்?
தவறி முளைத்த பின்னும்
ஏன் வெட்டி களைந்தீர்?
உரங்கள் பல இருக்க
எங்களுக்கு மட்டும் ஏன்
கள்ளிப்பால் மட்டுமே
தெளித்தீர்?
வீட்டுக்கு ஒரு
மரம் வளர்ப்போம்
என்றார்களே,
அது என்ன
ஆண் மரங்களை
மட்டுந்தானா?
எங்களையும் வளரவிட்டுப்
பாருங்கள்,
நாங்கள், பூக்கள் சொரியும்
செடிகளாக,
நிழல் தரும் மரங்களாக,
காய், கனி நல்கும்
தோப்பாக மாறமுடியும்.
தாமாக எங்களை
முகரத்துனியாதீர்,
நாங்களாகவே உங்களைச் சுற்றி
நல்ல சுகந்தத்தை
அள்ளி வீசுவோம்.
அழகாக வளரவிட்டுப் பாருங்கள்
எங்களை,
பின் நீங்களும் அற்புதமாக வளர்வீர்கள்!!!!!!

1 comment: