Thursday, October 29, 2015

ஆதிக்கம்


ஒரு
நிமிடமும்
வீணாக்காமல்
அன்னலும்
நோக்கினாள்
அவனும்
நோக்கினான்
யாரை?
கையில்
இருந்த
செல்பேசியை
தனி தனியாக.....

Wednesday, October 28, 2015

உறவு பாலம்.....

உறவு பாலம்.....
முக நூலும்
வைபரும்
வாட்ஸ் ஆப்பும் 
இல்லையென்றால்
இன்று
பல
உறவுகள்
வால் அறுந்த
காற்றாடிகள் தான்....
சலைக்காமல்
தேடுகிறோம்
ஓயாமல்
அழைக்கிறோம்
கண்டதையெல்லாம்
பகிர்கிறோம்
ஓசி என்று
இருக்கும் வரை
அத்துனை பேரும்
கூட்ட கூட்டமாக
உறவு பாதையில்
பயணிக்கிறோம்
காசு மட்டும்
வசூலித்தால்
எத்தனை
பாதை
காட்டுப் பாதையாகும்?
கால் பதியா
பாதையாகும்??

Saturday, October 24, 2015

கொலு பொம்மைகள்

ஒன்பது நாட்கள்
வெளி உலகம் வந்து
தூய காற்றை
சுவாசித்து,
உற்றார் உறவினரோடு,
உண்டு மகிழ்ந்து
கூடி குலாவி
பாடி ஆடி
விடுதலை வாழ்க்கையை
சுவைக்க,
நாங்கள்
வருடத்தில்
முன்ணூற்றி ஐம்பத்தாறு
நாட்கள்
இருக்கிறோம்
சிறைவாசமும்
உண்ணா நோன்பும்
மௌன விரதமும்!!

ஆனாலும்
நம்பிக்கையுடன்
காத்திருப்போம்
வருடம் ஒருமுறை
கிடைக்கும்
அந்த விடுதலைக்காக!!!!!!

Saturday, October 17, 2015

ஏற்றமெனில்.....!!!!

கோப்பைகள் வேண்டாம்,
வண்ணப் பட்டு சால்வைகள் வேண்டாம்,
மெடல்கள் வேண்டாம்,
பாராட்டு மழை பொழியவும் வேண்டாம்,
பத்திரமும் வேண்டாம்,
காசோலையும் வேண்டாம்
காகித பணமும் வேண்டாம்!!

என் சிறிய செயலுக்கு,
நான் சமைக்கும் உணவிற்கு,
நான் பாடும் பாட்டிற்கு,
நான் கிறுக்கும் கவிதைக்கு,
நான் தீட்டும் ஓவியத்திற்கு,
நான் உடுத்தும் உடைக்கு,
என் குழந்தை வளர்ப்பிற்கு,
நம் இல்லம் கோவிலாய்
இருப்பதற்கு,


 சிறு அங்கீகாரமே எனக்கு
பெரும் விருது,
அது இல்லையேல்
நான் வெறும் எருது...

ஒரு சிரிப்பு,
ஒரு அணைப்பு,
ஒரு சொல்,
கண்களில் ஆச்சரியக் ஒளி,
வாய் மொழியில் ஒரு சிறு
ஆச்சரியக் குறி!!


இவையாவும் உண்மையாக
இருக்கும் வரை,
போதும் இவை எனக்கு,
ஏணியில் எனை ஏற்றிவிட,
வாழ்வதனில் நாம் ஏற்றம் பெற.........



தனிமை.....



வானம்
நிலவு
சூரியன்
பனை மரம்
ரோஜா
இவை யாவும்
ஒருமையிலும்
தனிமையிலும்
அழகு,
மனிதர்கள் மட்டும்
இதில் விதி விலக்கு........

Monday, October 12, 2015

குற்றமா?

வெளியில் வைத்து
அடை காத்தால்
மனித கழுகுகள்
கொத்திவிடும் என
பத்து மாதமும்
என்னுள் வைத்து
அடைகாத்தேன்.

நீ பூமியில் வந்து
விழுந்த நாள் முதல்
கண்விழித்து பாதுகாத்தேன்.
என் உலகம் நீயே ஆக
உலாவந்தேன்.

உன் குரலே நான்
ரசிக்கும் இசையானது.
என் கைப்பிடித்து
நடந்த போது உன் 
பிஞ்சு கைகளே
என் ஊன்று கோலானது.

உன்னுடன் விளையாடிய போதெல்லாம்
நானும் ஒரு குழந்தையேனேன்.

நட்சத்திரங்களுக்குள்
நீ நிலவாய்
ஜொலித்திட கனாக்கண்டேன்.

நீ ஏறிய படிக்கற்கள்
சரியா வண்ணம் 
தாங்கிப் பிடித்தேன்.

நீ கொண்டு வந்த
பரிசுக்கோப்பைகளை
கண்டு வானுயரம்
உயர்ந்து
பின் நிலம் வந்தடைந்தேன்.

நான் படிக்க முடியாததை
நீ உன் குறிக்கோளாய்
தெர்ந்தெடுத்த பொழுது
வியப்புற்றேன், ஆச்சரியப்பட்டேன்.

என் கனவை உன்னுள்
நானறியாமல் விதைத்துவிட்டேன்.
அதை நினைவாக்க 
நீ விழைந்த போது
என்னை மறந்தேன்.

இத்தனையும் ஒரு புறம் இருக்க,

உன் பாதை நோக்கி
தேசம் விட்டு,
என் கூட்டை விட்டு
நீ செல்லும்
நாள் வந்த போது,

விழியோரம் நின்ற
கண்ணீரை அணை போட்டு
தடுத்து விட்டு
பொய்யாக உதட்டோரம்
சிரிப்பை மலரச்செய்து
போய் வா மகளே
என்று வழியனுப்பி
வீட்டுக்கு வந்தவுடன்

அணை திறந்த வெள்ளமாய்
கண்ணங்களில்
கண்ணீர் 
கரைபுரண்டோட,
உன் புகைப்படம்
தடவி,
உன் படுக்கை தழுவி,
உன் வாசனை
வரும் என
உன் ஆடை முகர்ந்து
இந்த ஐந்து வருடமும்
எப்படி நகரும்
என காத்து இருக்க 
அறியாமல்
தூக்கம்
கண்களை தழுவாமல்
இரவு பகல் 
பாராமல் காத்து இருக்கின்றேன்...

தாயானது
குற்றமா?

உன்னை பெண் புலியாய்
வளர்த்தது
என் குற்றமா?

என் கனவை
உனக்குள் திணித்தது
என் குற்றமா?

இறக்கை முளைத்த பின்னும்
என் கூட்டுக்குள்ளேயே
உன்னை வைத்துக்கொள்ள
ஆசைப்படுவது 
என் குற்றமா?

எது குற்றம்?
என் மகளாக மட்டுமே
இருந்துவிடு என்ற 
பெருங்குற்றம்
புரியாதவைரையில்
தாய்மை பிறவியில்
யாதும் 
நியாயமே!!!