Monday, October 12, 2015

குற்றமா?

வெளியில் வைத்து
அடை காத்தால்
மனித கழுகுகள்
கொத்திவிடும் என
பத்து மாதமும்
என்னுள் வைத்து
அடைகாத்தேன்.

நீ பூமியில் வந்து
விழுந்த நாள் முதல்
கண்விழித்து பாதுகாத்தேன்.
என் உலகம் நீயே ஆக
உலாவந்தேன்.

உன் குரலே நான்
ரசிக்கும் இசையானது.
என் கைப்பிடித்து
நடந்த போது உன் 
பிஞ்சு கைகளே
என் ஊன்று கோலானது.

உன்னுடன் விளையாடிய போதெல்லாம்
நானும் ஒரு குழந்தையேனேன்.

நட்சத்திரங்களுக்குள்
நீ நிலவாய்
ஜொலித்திட கனாக்கண்டேன்.

நீ ஏறிய படிக்கற்கள்
சரியா வண்ணம் 
தாங்கிப் பிடித்தேன்.

நீ கொண்டு வந்த
பரிசுக்கோப்பைகளை
கண்டு வானுயரம்
உயர்ந்து
பின் நிலம் வந்தடைந்தேன்.

நான் படிக்க முடியாததை
நீ உன் குறிக்கோளாய்
தெர்ந்தெடுத்த பொழுது
வியப்புற்றேன், ஆச்சரியப்பட்டேன்.

என் கனவை உன்னுள்
நானறியாமல் விதைத்துவிட்டேன்.
அதை நினைவாக்க 
நீ விழைந்த போது
என்னை மறந்தேன்.

இத்தனையும் ஒரு புறம் இருக்க,

உன் பாதை நோக்கி
தேசம் விட்டு,
என் கூட்டை விட்டு
நீ செல்லும்
நாள் வந்த போது,

விழியோரம் நின்ற
கண்ணீரை அணை போட்டு
தடுத்து விட்டு
பொய்யாக உதட்டோரம்
சிரிப்பை மலரச்செய்து
போய் வா மகளே
என்று வழியனுப்பி
வீட்டுக்கு வந்தவுடன்

அணை திறந்த வெள்ளமாய்
கண்ணங்களில்
கண்ணீர் 
கரைபுரண்டோட,
உன் புகைப்படம்
தடவி,
உன் படுக்கை தழுவி,
உன் வாசனை
வரும் என
உன் ஆடை முகர்ந்து
இந்த ஐந்து வருடமும்
எப்படி நகரும்
என காத்து இருக்க 
அறியாமல்
தூக்கம்
கண்களை தழுவாமல்
இரவு பகல் 
பாராமல் காத்து இருக்கின்றேன்...

தாயானது
குற்றமா?

உன்னை பெண் புலியாய்
வளர்த்தது
என் குற்றமா?

என் கனவை
உனக்குள் திணித்தது
என் குற்றமா?

இறக்கை முளைத்த பின்னும்
என் கூட்டுக்குள்ளேயே
உன்னை வைத்துக்கொள்ள
ஆசைப்படுவது 
என் குற்றமா?

எது குற்றம்?
என் மகளாக மட்டுமே
இருந்துவிடு என்ற 
பெருங்குற்றம்
புரியாதவைரையில்
தாய்மை பிறவியில்
யாதும் 
நியாயமே!!!

No comments: