Monday, March 21, 2016

எதிர்பார்ப்பு

உறவுகள் மேல்
பற்று வைத்தேன்
கருவேப்பிலையாய்
குப்பையில் விழும் வரை...

ஆசை வார்த்தைகளை
நம்பி பாசம் கொண்டேன்
அவை உள்ளத்திலிருந்து
அல்ல உதட்டிலிருந்து
உதிர்ந்தவை என்று
அறியும் வரை......


காணல் நீர் மீது
காதல் கொண்டேன்
விலகி நின்று பார்த்தவரை.

எதிர்பார்ப்புகள்
பொய்யாகி போனபோது
உறவுகள் பொய்யானது,
உறவுகள் பொய்யான போது
உணர்வுகளும் பொய்யானது,
உணர்வுகள் பொய்யான போது
காணல் நீரும்
கண்ணீர் ஆனது.....

No comments: