Monday, April 4, 2016

நீரின் நிலை

கரு மேகக் கூட்டுக்குள்
அமைதியாய்
நீ இருக்கும் வரை
அழகு மயிலும்
தோகை விரித்தாடும்!

சிறு சிறு தூறலாய்
மூக்கின் நுனி நீ தொடும் நொடி
சிறு குழந்தையின் நாக்கு தானாய்
வெளி வந்து உனை சுவைக்கும்!

மழை அருவியாய்
நீ நிலம் வந்து விழும் காலம்
பயிர் எல்லாம் பச்சை வண்ணம் பூசிக்கொள்ளும்!!

கட்டுக் கடங்கா காளைப்போல்
காட்டாற்று வெள்ளமென பாயும் நேரம்
சிறு உயிர் கூட கூட்டுக்குள்
அடங்கி போகும்!!

உனை குளம் வெட்டி காப்பதா?
தூர் எடுத்து தடுப்பதா?
அணைக் கட்டி அணைப்பதா?
இல்லை நீ கடல் கலக்க விடுவதா?
விடை அறிந்தும் அறியாமலும் தியானிக்கின்றோம்!!!
 தியானம் களையும் நேரம்
கரு மேகமும் களைந்து விடும்!!!!







No comments: