Wednesday, April 13, 2016

மனதில் மட்டும்

பேரக்குழந்தைகளுடன்
கதை பேசி
விளையாடும் போதும்,

பக்கத்து வீட்டு
பைங்கிளி
”அங்கிள்”என்று
ஆசையாய்
கூப்பிடும் போதும்,

பாலைவனமாகிப்போன
தலையை
தொப்பி வைத்து
மறைத்த போதும்,

மீசையில் இருக்கும்
வெள்ளிக்கம்பிகளுக்கு
கருவண்ணம் பூசி
கண்ணாடியில்
தனக்கு தானே
மகிழ்ந்த போதும்,

திருட்டுத் தனமாய்
வாயில் அடக்கிய
லட்டை மென்று
விழுங்கிய போதும்,

மகள் வாங்கி தந்த
வண்ணமிகு டி-ஷர்டை
ஆசையாய் அணிந்த போதும்,
அதை அன்பு  மனைவி
ஆசையாய் ரசித்த போதும்,

பால்ய கால
நண்பர்களுடன்
பழங்கதை பேசி
சிரித்த போதும்,

மனம் உணர்ந்த
இளமைத் துள்ளல்,
மனம் போன
போக்கில்
உடல் போக
மறுத்த போது
மாயமானது..........




No comments: