Wednesday, May 25, 2016

மிதியடி

மிதியடி

என்னை அழுக்காக்கிவிட்டு
உள்ளே செல்லும் நீ
சுத்தமானவன்,
உன் அழுக்கை
சுமக்கும் நானோ
வீட்டின் வெளியே
தீண்டத்தகாதவனாக!!!!

எங்கு சென்று வந்தாலும்
உன்னை வீட்டிற்குள் முதலில்
வரவேற்பென்பது நானாக இருப்பினும்,
 ஒரு நாளும் யாரும்
 என்னை வீட்டிற்குள்
அழைப்பதில்லை!!

சுமை தாங்க நான் 
முடியாதவனாக ஆகும் நேரம்
என் சுமை இரக்க யாரும் நினைப்பதில்லை!!
வேறொரு சுமைதாங்கி 
என் இடம் வந்து சேர்கிறான்,
நானோ சவக்குழியில்!!!

No comments: