Monday, August 15, 2016

எது சுதந்திரம்!!

எதார்த்தமான சொல் வேண்டும், 
செயல் வேண்டும்,
நல்லெண்ணம் வேண்டும்.
பகையில்லா உறவு வேண்டும்
பயமில்லா வாழ்க்கை வேண்டும்
சுத்தமான சுற்றுப்புறம் வேண்டும்
தூய்மையான காற்று வேண்டும்
கலப்படமில்லா உணவு வேண்டும்
அறிவும், நல்லொழுக்கமும் தரும் கல்வி வேண்டும்
ஆரோக்கியமான வாழ்வு வேண்டும்
பேசிப் பழகும் சுற்றத்தார் வேண்டும்
ஏற்றத்தாழ்வு இல்லா சமூகம் வேண்டும்
பிற உயிரை தனதென மதிக்கும் எண்ணம் வேண்டும்
குழந்தைகளை தெய்வமென நினைக்கும் குணம் வேண்டும்
எல்லாவற்றிற்கும் மேலாக,
சாய்ந்து அழ தோள் ஒன்று வேண்டும்....
என்னை எனக்காக நேசிக்கும் சொந்தம் வேண்டும்
நான் நானாக வாழும் நாள் வேண்டும்
இத்தகைய சுதந்திர தினம் சீக்கிரம் கொண்டாட வேண்டும்

No comments: