Sunday, November 6, 2016

சர்ச்சை!!

சர்ச்சை!!
படைத்தவனுக்கு
நாமம்
போடுவதில்
சர்ச்சை!
”U” வா ”Y” ஆ
”ப” வா!!
வாரம்
ஒரு முறை
நாமம் மாற்றும்
ஸ்ரீரங்க
யானைக்கு
சந்தேகமாம்
தான்
வடகலையா
தென்கலையா?
என்று!
பிறருக்கு
நாமம்
போடும்
மனிதன்
மட்டும்
தன் நெற்றியை
மறைத்து
போகிறான்......

No comments: