Friday, January 20, 2017

வீரத்தமிழா!!

அறம் வழி என ஆனப் பின்
உயிரே போயினும்
தரம் தாழாதே
தடம் மாறாதே 
மறத்தமிழா!
பரமே வரினும்
அறமே வரம் என
கரம் குவித்து கேள் வீரத்தமிழா!!
நீ நடத்துவது
மெளனப் போராட்டம் ஆயினும்
புவிதோறும் ஒலிக்கும்
உன் வீர முழக்கம்.......
கை கொண்டு
கண், காது, வாய் மூடி
நிற்கும் அற்பனுக்கும்
சீக்கிரமே புரிந்துவிடும்
உன் ஒலி மழைத்துளி அல்ல
கடல் அலையின் ஓயா ஒலியென.....
உன் லட்சியமும், பாதைகளும்
ஒன்றெனவே இருக்கட்டும்
ஒற்றுமை தான் வானளாவ ஓங்கட்டும்......
அறம் மட்டுமே ஆயுதமென
சூளுரைதான் எடுத்துவிடு...
சீக்கிரமே உன் யாகம்
பலித்துவிடும்...
இரவும் தான்
விடிந்துவிடும்......
அதுவரையில் அமைதியாய்
போராடு என் வீரத்தமிழா....

No comments: