Monday, February 6, 2017

அழைப்பு

என் ஆழத்தில் 
புதைந்து 
அமைதியாய்
உறங்கிக் கொள் 
என்றது கடல்,
என் சுழற்சியால்
சுகமாய் போர்த்திக் கொள்
என்றது மேகம்,
என் உயரத்தின் பின்
ஒளிந்து ஓய்வெடு
என்றது மலை..
நாளை புதிதாய்
பால சூரியனாய்
மீண்டும் பிறக்க
இவ்வுலகம்
ஒளியால் ஒளிர,
எவ்விடம் மறைய
சிறப்பிடம்?
என யோசித்தான்
சூரிய தேவன்........

No comments: