Friday, March 17, 2017

Hope

Wanting to
hold the reins,
knowing that
not a thing is
under my hold!
Wishing to
turn the time
backwards,
knowing that
not a hand
goes anticlockwise!
Wishing the
mind to stop thinking
knowing that
it will happen
only when the
heart stops its beating!
The sun can
rise and set
as and when
it wishes!
Not a gift
for me
I know, but
I wish and I will wish
for hope is
my strength!!!

Saturday, March 11, 2017

தண்ணீர் தண்ணீர்!!

தண்ணீர் வேண்டி
அகதியாய் அலையுது
ஒர் இனம் !
இல்லை அவருக்கு
ஒர் புகலிடம்!

சாமானியனின் உயிர்க் காற்றை
உறிஞ்சி உயிர் வாழ்ந்து
பழகிப்போன ஒரு கூட்டம்,
காற்றை உறிஞ்சி
வாழப்  பழகிக்கொள் என்கிறது!!

கடல் மீன்கள் இல்லை இவர்கள்
உப்பு நீர் பருகி வாழ
புழு பூச்சியும் இல்லை இவர்கள்
சாக்கடை நீர் குடித்து உழல!
கிருமியும் இல்லை இவர்கள்
விஷத் தண்ணீரில் தாகம் தீர்த்துக்கொள்ள!


மனிதனடா! இவனும் உன் சக மனிதனடா,
இதை உணர்வாயா அதிகார வர்க்கமே!
இன்று இவன் தண்ணீர் இன்றி மடிந்தால்
நாளை நீயும் மடிவாய்!
இது யாவர்க்கும் பொதுவே!
நீ பணத்தை கரைத்து
குடிக்க நினைத்தாலும்
அதற்கும் உனக்கு வேண்டும் தண்ணீர்!


இவன் வயலும் , வயிறும்
வறண்டு போனது!
வாழ்வும்,  நிலையும் தான்
தாழ்ந்து போனது!
வற்றாத ஜீவநதியும்
வற்றிப்போனது!
இவனின் ஜீவனும்
உடல் விட்டுப் பிரிந்தது!
பூமித்தாயை விட்டு
ஏனடா கடல் தாய்க்கு
தண்ணீரை தாரை வார்க்கிறாய்?

ஐந்து அறிவு கொண்ட
ஒட்டகமே தனக்குள்ளே
தண்ணீர் சேமிக்க அறிந்து இருக்கையில்
ஆறறிவு கொண்ட மனிதனே
நீ மட்டும் ஏன் இந்த
சூட்சுமத்தை கற்க மறுக்கிறாய்?
அடுத்த பிறவியில் ஒட்டகமாய்
பிறக்க நினைக்கிறாயா?
இல்லை இப்பிறவியிலேயே
கூடு விட்டு கூடு பாய விழைகிறாயா?

தண்ணீர்ப் பந்தல் வைத்து
தாகம் தீர்த்த இனம் வழி வந்தவர்
இன்று தண்ணீர் பாக்கெட்டில்
தாகம் தீர்த்துக் கொள்கிறார்!

இளநீரும் இங்கு
முதுமை அடைந்தது!
பசுவின் மடியும்
காய்ந்து போனது!
தாய்ப்பாலும்
வற்றிப் போனது!


தண்ணீர் வேண்டி
யாகம் ஒரு புறம்,
மணல் மீது
மோகம் மறுபுறம்!
வாழும் பூமியில் இல்லா நீரை
வேற்று கிரகத்தில் தேடுகிறான்!

தனி ஒருவனுக்கு
உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திட
கூறினான் முண்டாசு கவி!
தனி ஒருவனுக்கு
தண்ணீர் இல்லை என்றால்
யாரை அழிப்பது ?
புறட்சி ஒன்று வெடித்தால் மட்டுமே
மறையும் இங்கு இந்த  வறட்சி!







Friday, March 10, 2017

நெடுந்தூர பயணம்!

நெடுந்தூர பயணம்!
நெடுவாசல் பயணம்!
தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை இங்கே!
எரிவாய்வு எங்கே என்று ஒரு கூட்டம் அலையுது இங்கே!
தண்ணீர் இன்றி சாகும் நேரம் இதோ கண் முன் தெரியுது இங்கே!
செத்த பின் எரிக்க உதவுமாம் இந்த எரிவாய்வு அங்கே!
எரிந்த பின் நாங்களும் ஆவோம் ஒரு நாள் கரித்துண்டாய்!
மங்கையாய், மடந்தையாய்,அரிவையாய், கொழித்து செழித்த எம் நில மங்கை
இன்று வறண்ட சருமத்துடன் வரிகோடுகளுடன் பேரிளமங்கையாய் சுருண்டு உறங்குகிறாள்!
தவித்த வாய்க்கு எங்களுக்கு தண்ணீர் போதும்
பழரசம் வேண்டவில்லை நாங்கள்!
மரக் கறி வேண்டி பந்தியில் அமர்ந்த எங்களுக்கு
வேண்டாம் இந்த கரித்துண்டு!!
ஊன் இருக்க எம் நில மங்கையின் உயிரை உரிஞ்சாதீர்!
மக்கள் இன்றி மாநிலம் தான் செழிக்குமா?
சுடுகாடுகளில் மனிதன் தான் வாழமுடியுமா???

Wednesday, March 8, 2017

மகளிர் தினம்!!
இது ஒரு நாள் கூத்து
இல்லை எனக்கு!
ஒவ்வொரு நாளையும்
தனதாக்கி கொள்ள
நித்தம் போராடுகிறாள் அவள்!
இந்நாளை பெண்களுக்கென
அங்கீகரிக்க,பெண்மையை போற்ற
இன்று மட்டுமே
வாழ்த்துக்களும், கவிதைகளும்,
பாடல்களும், பூங்கொத்துக்களும்
ஒருவருக்கொருவர்
பரிமாறிகொள்கின்றனர்!
கருவறை முதல் கல்லறைவரை
பெண்களை அன்போடு,
அக்கறையோடு, மரியாதையோடு
நடத்துவோம் என்று
இந்த உலகமே
ஒன்றுகூடி
இன்று ஒரு நாள் மட்டும் கூவுகிறது!
சத்தியபிரமாணமும் எடுக்கிறது!
ஆம், சாத்தான்களும்
வேதம் ஓதுகின்றன!
அவர்கள் மறந்து போனார்கள்,
வாங்கவோ, விற்கவோ
ஒரு பொருள் அல்ல அவள்!
உங்கள் வசப்படுத்தி ஆட்டுவிக்க
உங்களின் செல்லப்பிராணியும் அல்ல அவள்!
கோலெடுத்து ஆடவைக்க
குரங்குமல்ல அவள்!
மென்று துப்ப
உங்கள் வாய்க்குள் சிறைப்பட்ட
வெற்றிலை பாக்கும் அல்ல அவள்!
உங்கள் ஆசைக்கும், கோபத்திற்கும்,
அதிகாரத்திற்கும் ஆன
வடிகால் அல்ல அவள்!
மூச்சில்லா, மனமில்லா,
சுய அறிவில்லா
X கிரோமோசோம்களால் ஆன
வெத்து பொட்டலம் அல்ல அவள்!
அவளுக்கென்று
தனித்துவம் உண்டு,
அவளின் மனதிற்கும், உடலுக்கும்
அவளுக்கு மட்டுமே உரிமையுண்டு!
அவளை கடவுளென
கொண்டாடவும் வேண்டாம்,
தேவதையென போற்றவும் வேண்டாம்!
அவளை அவளாக சிந்திக்க விடுங்கள்,
சிந்தித்ததை பேச வாய் திறக்கையில்
வாய்ப்பூட்டு கொண்டு பூட்டாதீர்!
அவளுக்கு தேவை
பயமில்லாமல் நடமாட
ஒரு உலகம்,
அதுமட்டும் வாய்த்துவிட்டால்
அவளே சிங்கம்!
இப்பொழுது இல்லாவிட்டாலும்
கூடியவிரைவில் அவள்
கனவு நினைவாகுமா???
வாய்க்கும் அந்நாளே
இனிய மகளிர் தினமாகும்!!

Woman's day

Woman's day
Is it just a day's event?
No , not for me!
In this world
she strives everyday 
to get a day
to celebrate as her own!
Wishes , poems, songs
bouquets passed from
person to person
to acknowledge this day,
and praise womanhood!
The only day
the whole world crows that
Women are to be treated
with care, love and respect
from womb to grave!
She is not a commodity
to be bought or sold!
Nor a pet to be trained
as you wish!
Not a vent for your lust, power or anger
Neither is she a breathless, heartless, mindless
bundle of X chromosomes!
She is an entity by herself,
and holds entitlement of herself
both physical and mental!
Celebrate her not like a goddess
treat her not like an angel!
Just let her live like a human!
Let her think on her own,
Let her speak what she thinks!
All she wants is a world
to walk around sans fear !
Will her dream come true
though not now
but sometime soon!!