Thursday, April 20, 2017

எலும்பொன்று இருந்திருந்தால்

இந்த நாக்கிற்கு
எலும்பொன்று இருந்திருந்தால்
மொழி என்று ஒன்று
பிறந்து இருக்குமா?
இத்தனை பிரளுமா?
இவ்வளவு
குட்டிக்கரணம் அடிக்குமா?
முப்பத்திரண்டு அசுரர்கள்
காவல் இருக்கையிலும்
தன் போக்கிற்கு
உலா வருமா?
அறுசுவையை தான்
சுவைக்க முடியுமா?
மூக்கின் நுனியை
தொட முயற்சிக்குமா?
வறண்டு போன
உதட்டு சுவர்களுக்கு
தண்ணீர் தான் பாய்ச்சுமா?
தெரிந்துத்தான் படைத்தானோ
நரம்பில்லா எலும்பில்லா
நாக்கை!
எளிதாய் போனது
கொடுத்த வாக்கை
பறக்கவிட .............

No comments: