Tuesday, April 25, 2017

கானல் நீர்

காணும் இடமெல்லாம்
கானல் நீர் தெரியுதே!
சுட்டெரிக்கும் வெயிலிலே
கானல் நீரும்
ஆவியாய் போகுதே!

கானல் நீர் மட்டும்
காணும் நீர் ஆகுமானால்
தார் ஒட்டிய
கரும்பாதத்திற்கு
ஓடை நீராய் ஆகாதோ?
பள பளக்கும் கண்ணாடியாம்
கானல் நீர் கண்டு
முகம் பார்ப்போர் யாருமுண்டோ?
உயர பறக்கும் பறவை கூட
தாகம் தனிக்க
ஓர் நிமிடம் கீழே வந்து
ஏமாந்து போனதை பார்த்தது யார்?
நாக்கு தொங்கி எச்சில் ஊற்றி
மூச்சு இரைக்க ஓடிவந்த
நாய் கூட நக்கி பார்த்து
சுட்டுக் கொண்டது தன் நாக்கை!
எடுத்து வைக்கும் அடுத்த அடி
சறுக்கும் என
பயந்து பயந்து
அடி வைப்பார் சிலர் இங்கே!
வாகனத்தில் போனாலும்
வேகமாய் போனால்
நடப்போர் மீது
அள்ளித் தெளிக்கும்
தண்ணீர் என
மெதுவாய் போவோரும் இங்குண்டு!
கானல் நீர் மீது
காதல் கொண்டு
கவி பாடும் கவிஞரும் சிலர் உண்டு!
கானல் நீர் மட்டும்
காவிரி நீர் ஆனால்
காட்சி பிழை மறையுமே
சிவ கடாட்சம் கிட்டுமே!!!

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

கானல் நீர் மட்டும்
காவிரி நீராய் மாறினால்
நினைக்கவே மகிழ்வாய்தான் இருக்கிறது