Saturday, September 16, 2017

கட்டடத்தின் மேல்
ஒரு பஞ்சு
பொதி குவியல்
சிதறி பரவி இருக்கிறது!
என் வீட்டு
அடுப்பில் பொங்கிய
பாலின் நுரை
எப்படி
அவ்வளவு தூரம்
பறந்து சென்றது?
என் வீட்டு
வெண்ணெய்
தாழியிலிருந்து
எப்படி
இவ்வளவு வெண்ணெய்
வானம் சென்றது?
சொர்க்கம்
அமர்ந்த கண்ணனுக்காகவா
இது யாவும்??

No comments: