Wednesday, November 22, 2017

கருங் காடு.....




இவை என்ன
வெட்கம் உதிர்த்த
மரங்களா?
வானில் வேயப்பட்ட
கருஞ்சிலந்தி
வலையா?
விண்மீன்களை
பிடிக்க
விரிக்கப்பட்ட
மீன் வலையா?
அப்பால் உதிக்கும்
செங்கதிர்கள்
எமை அண்டாமல்
காக்கும்
உயர்ந்து வளர்ந்த
குச்சி வேலியா?
தேவர்கள்
சொர்க்கத்தில்
வர்ணம் பூசியப்பின்
தூக்கி எறிந்த
தூரிகைகளா?
சொத்து சுகம்
இழந்த பின்னும்
ஒருவொருக்கொருவர்
துணையாய் என்றும்
வாழ்வோம் என்னும்
கூட்டு குடும்பமா?
எத்துனை முறை
மடிந்தாலும்
மீண்டும்
உயிர்தெழுவோம் என்ற
நம்பிக்கையின்
வெளிப்பாடா?
தாய்மண் பிடிப்பு
இருக்கும் வரை
தலை நிமிர்ந்து
நிற்போம் என்ற
ஆணவச்செறுக்கா?
இல்லை , இயற்கையின்
துகில் உரிப்பு
ஒத்திகையா?
உயிர்தலும்
உதிர்தலுமே
வாழ்க்கையின் நியதி!
இதுவே இக்காட்டின்
மெளன சாட்சி!

No comments: